என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பூந்தமல்லி சிறுமிக்கு பாலியல் தொல்லை
நீங்கள் தேடியது "பூந்தமல்லி சிறுமிக்கு பாலியல் தொல்லை"
பூந்தமல்லி அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 99 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநின்றவூர்:
பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் ஒரு தம்பதியினர், 10 வயது மகளுடன் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார்கள். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியை அழைத்து அடிக்கடி விளையாடி வந்தார். அவர் வயதானவர் என்பதால் சிறுமியின் பெற்றோர் அதனை தவறாக எடுக்கவில்லை.
இந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திய பரசுராமன் சம்பவத்தன்று சிறுமியை தனியாக அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதில் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் பெற்றோர் விசாரித்த போது சாக்லேட் கொடுப்பதாக பரசுராமன் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ஆவடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் முதியவர் பரசுராமன், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரமும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பரசுராமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் ஒரு தம்பதியினர், 10 வயது மகளுடன் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார்கள். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியை அழைத்து அடிக்கடி விளையாடி வந்தார். அவர் வயதானவர் என்பதால் சிறுமியின் பெற்றோர் அதனை தவறாக எடுக்கவில்லை.
இந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திய பரசுராமன் சம்பவத்தன்று சிறுமியை தனியாக அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதில் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் பெற்றோர் விசாரித்த போது சாக்லேட் கொடுப்பதாக பரசுராமன் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ஆவடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் முதியவர் பரசுராமன், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரமும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பரசுராமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X